சூரியனின் வலை வாசல் |
| எச்சரிக்கை - உங்களுக்குதான்... Posted: 30 Jan 2011 08:38 PM PST அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை இத்தனை நாட்களாக மொரீசியஸ்ல் மையம் கொண்டு இருந்த புயல் சற்றே தீவிரமாகி, வடமேற்கே நகர்ந்து, நாளை இந்திய நேரம் காலை 6.30 மணி அளவில் சென்னையை தாக்கப்போகிறது. இதனால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் நன்மையே நடக்க இருக்கிறது. பிறகு அந்த புயல் கோவையில் கொஞ்ச நாளும், வந்தவாசியில் கொஞ்ச நாளும் அருள் மழை பொழிந்து அவ்வப்பொழுது சென்னையையும் தாக்கும் என அறிவிக்கப்பபடுகிறது. அந்த புயலுக்கு அருண்பிரசாத் என பல வருடங்களுக்கு முன்பே பெயரிடப்பட்டுவிட்டது. @ ஆல், கூல் டவுன்... கூல் டவுன்... கூல் டவுன்... ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க! அட, நான் ஒன்னும் உங்க கிட்ட பெருசா எதிர் பார்க்கலைங்க, நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம். நான் தான் பரவாயில்லப்பா மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும், நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க) என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும், அதை சமாளிக்க மொரீசியஸ் மக்கள் இப்போவே என் காலடி மண்ணை கொண்டு போய் எரிமலைய சுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் எரிமலைங்க பயந்து உள்ளவே இருக்குமாம். சரி, அண்ணண் தரிசனம் வேண்டுறவங்க, அண்ணண் ஆட்டோகிராப் தேவைபடுறவங்க, அண்ணணுக்கு ஊர்காசு தர விருப்பபடுறவங்க (எத்தனை முறை சொல்லுறது அண்ணண்னு சொன்னா அது நான் தான், திரும்ப திரும்ப கேட்டுகிட்டு) எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் , டிராபிக் ஜாம் ஆக கூடாதுனு சொல்லி ரஜினிகாந்து, டாக்குடரு தம்பி, கலிஞ்சருனு யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். பார்த்து சூதனாம நடந்துக்கோங்க இன்னொரு மகர ஜோதி டராஜடி சென்னைல வேணாம். இருங்க, இருங்க, ஒரு நிமிஷம் அங்க ஏதோ சத்தமா இருக்கு என்னானு பார்த்துட்டு வரேன். எலேய்ய்ய்ய்ய்ய்ய்...... யார்ரா அது என் பிளாக்கை இப்போவே ஏலம் போட ஆரம்பிச்சிட்டது? நடக்காது மகனே, நடக்காது. பிளாக்கை மூடி யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன், பதிவுகள் வழக்கம் போல வரும். 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி. சிங்கம் தூங்கினாலும் பதிவு சும்மா ஜிவ்வுனு வரும் (மறுபடியும் பாரு, அட சிங்கமும் நான் தாங்க) சரி, அடுத்த 3 வரிகளை யாரும் படிக்காதீங்க, அது டெரருக்கு மட்டும்தான் (நீங்க பதிவையே படிக்கலைனு தெரியும் இருந்தாலும் லைட்டா ஒரு பிலடப். லைட்டாதான்பா) @ டெரர் (அப்பாடி எழுதி அடிச்சிட்டேன், இப்போ யாராலும் படிக்க முடியாதே படிக்க முடியாதே....) சரி எல்லோரும் கேட்டுக்கோங்க அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்.... என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க. BYEEEEEEEEEEEEEE......... |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

No comments:
Post a Comment