ரொமான்ஸ் ரகசியங்கள் !
உண்மை அதுவல்ல. திருமணம், காதலுக்கு முற்றுப் புள்ளியும் அல்ல. 13 வயதில் ஆரம்பித்து தொடர்ந்து வாழ்நாள் முழுக்க மீண்டும் மீண்டும், புதியவர்களுடன் துளிர்த்துக் கொண்டே இருக்க சாத்தியமுள்ள உணர்வுதான் காதல். அதன் இலக்கையும், இலக்கணத்தையும் பற்றி பேசுவதற்கு முன், 'என்னது... காதல் திரும்பத் திரும்ப துளிர்விட்டுக் கொண்டே இருக்குமா, இது எல்லாம் தமிழ் கலாசாரத்துக்கு அடுக்காதே?’ என்று போர்க்கொடி தூக்க சிலர் தயாராக இருக்கலாம். ஆனால், அறிவியல் உண்மைகள் என்பவை, மிகத்தெளிவாக கலாசார எல்லைக் கோடுகளை கடந்துதானே நிற்கின்றன. பருவ வயது துவங்கும்போதே ஆரம்பிக்கும் காதல் வேட்கை... மதம், இனம், மொழி, பிராந்தியம் என்கிற எல்லா கட்டமைப்புகளையும் தகர்த்து, ஒருவர் உயிரோடு இருக்கும் கடைசி நாள் வரை நீடிக்கிறது. அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் கொள்ளும் தன்மை மனிதர்களுக்கு உண்டு. ஏன் தெரியுமா? நாம் ஏற்கெனவே இந்தத் தொடரில் பேசிக்கொண்டது போல, மனிதக் காதல் என்பது பெரும்பாலும் தாய் - சேய் உறவின் இன்னோர் மீட்டுருவாக்கமே. அதனால் தான் மனித பெண்ணுக்கு காதல் பெருகிவிட்டால்... தன் காதலனை அவள் குழந்தையைப்போல பாவிக்கிறாள். அவனை கொஞ்சுவதில் ஆரம்பித்து, அவனுக்கு அறிவுரைகள் கூறுவது எல்லாமே அவனை தன் மகன் என்று பாவித்தே.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)
No comments:
Post a Comment